கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழக இளைஞரணி சார்பில் நீட் எதிர்ப்பு வாகன பிரச்சாரம்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி குமரிமாவட்ட திராவிடர்கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பாக வாகன பிரச்சாரம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பாக நடந்த நிகழ்ச்சிக்கு திராவிடர்கழக பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் தலைமைதாங்க மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச்செயலாளர்செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ,மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் க. யுவான்ஸ் திராவிடர்கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், மாவட்ட மகளிரணி தலைவர் சு.இந்திரா மணி, திக மாநகர செயலாளர் மு.இராஜ சேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், செயலாளர் அலெக்சாண்டர் பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை, பி கென்னடி
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் மேல மெஞ்ஞானபுரம் இனியன் ஆகியோர் உரையாற்றினர். சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இளமாறன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், காப்பாளர் ஞா.பிரான்சிஸ், தோழர்கள் ப.வேலாயுத பெருமாள், பா. முத்துவைரவன், திமுக தொழிற்சங்க பொறுப்பாளர் வ.இளங்கோ, பள்ளியாடி சி. இளங்கோ, மகளிரணி சு.இந்திரா மணி இளைஞரணி அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment