விடியல் ஆட்சியில் விடியற்காலை காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 July 2024

விடியல் ஆட்சியில் விடியற்காலை காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்

 


விடியல் ஆட்சியில் விடியற்காலை காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்


 அரசு பேருந்து ஓட்டுநர்களின் அலட்சிய போக்கால் பரிதவித்த பாமர மக்கள் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனை பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தும் இடத்தில் இன்று காலை பேருந்திற்காக காத்திருந்த மக்கள் பேருந்து வராததால் ஏமாற்றம். அருமனை பேரூராட்சியில் இருந்து தினசரி கூலி வேலைகளுக்காக தினமும் விடியற்காலை 4 மணிக்கு அருமனை சந்திப்பில் காத்திருப்பார்கள். இன்றும் அது போல் காத்திருந்து ஏமாற்றம் தான் மிஞ்சியது. மக்கள் மன வருத்தத்துடன் வீடு திரும்பினார்கள் எனவே அரசு தயவு கூர்ந்து பேருந்து ஓட்டுநர்களின் அலட்சிய போக்கை கண்டித்து சரியான நேரத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment