சீரழியும் முல்லைப்பூக்காணி அங்கன்வாடி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 13 July 2024

சீரழியும் முல்லைப்பூக்காணி அங்கன்வாடி


சீரழியும் முல்லைப்பூக்காணி அங்கன்வாடி 


 கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்கா கடையாலுமூடு பேரூராட்சி ஆறுகாணி பகுதியில் உள்ள முல்லை பூக்காணி என்ற இடத்தில் முதன்முதலாக தோன்றிய சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கன்வாடி உள்ளது. இங்கு வேறு கல்வி வசதி கிடையாது. இதனால் சிறுபிள்ளைகளுக்கு கல்வி பயிலவும் ஊட்டச்சத்து வழங்கவும் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அங்கன்வாடி மிகவும் மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சத்துடன் அங்கன்வாடியில் கல்வி பயில குழந்தைகளை அனுப்புவதில்லை. தற்போது வாடகை கட்டிடத்தில் குறைந்த அளவு பிள்ளைகளை வைத்து கல்வி பயிற்றுவிக்கின்றனர் எனவே இந்த பழமையான கட்டிடத்தை சீரமைத்து பயனடைய செய்யுமாறு முல்லைப் பூக்காணி பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன்  T.இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment