மயிலாடி பள்ளியில் தாளாளர் பதவியேற்பு விழாவில் பி.டி.செல்வகுமார் வாழ்த்தினார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

மயிலாடி பள்ளியில் தாளாளர் பதவியேற்பு விழாவில் பி.டி.செல்வகுமார் வாழ்த்தினார்


மயிலாடி பள்ளியில் தாளாளர் பதவியேற்பு விழாவில் பி.டி.செல்வகுமார் வாழ்த்தினார்


தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் பள்ளி மயிலாடி,  றிங்கல் தௌபே மேல்நிலைப் பள்ளிகளில் தாளாளர் பதவியேற்பு விழா இன்று (25-07-2024) நடைபெற்றது.


கன்னியாகுமரி பேராய செயலாளர் பைஜு நிசித் பால் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் குமார், மயிலாடி சபை போதகர்கள் கிறிஸ்து தாஸ், ஆபிரகாம் ஜஸ்டின் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முன்னாள் மாணவர் பெறியாளர் ஜெரோம் எமில் பள்ளியின் தாளாளராக பொறுப்பேற்றார்.


சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்கம் தலைவரும் சமூக சேவகருமான பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்ற தாளாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்


நிகழ்வில், கலப்பை மக்கள் இயக்க குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், பள்ளியின் முன்னாள் தாளாளர் ஆல்வின் நாயகம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், தென் தாமரைக்குளம் LMS மேல்நிலைப் பள்ளி தாளாளர் கால்வின்,மயிலாடி பேருராட்சி துணை தலைவர் சாய்ராம், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சுதாகர் மற்றும் உறுப்பினர்கள், குலசேகரபுரம் ஊர் தலைவர் வாத்தியார் செல்வகுமார், றிங்கல் தௌபே நற்பணி மன்றம் தலைவர் சுபாஷ் மற்றும் உறுப்பினர்கள்,  மயிலாடி சபை உறுப்பினர்கள், கன்னியாகுமரி மாவட்டம் போதகர்கள், ஊர் பொது மக்கள், சபை பள்ளியின் ஆசிரியர்கள்  முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

No comments:

Post a Comment