அழகியமண்டபத்தில் அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு!!! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 July 2024

அழகியமண்டபத்தில் அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு!!!

 


அழகியமண்டபத்தில் அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு!!!


தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி தங்கம் (வயது 72). இவர்களுக்கு விஜிலா, சிந்து என 2 மகள்கள் உள்ளனர்.


கணவர் இறந்து விட்ட நிலையில் தங்கம், தனது 2-வது மகள் சிந்துவுடன் வசித்து வந்தார். அவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று பாட்டில்கள் சேகரித்து அதனை கடைகளில் கொடுத்து பணம் பெற்று வந்தார். இதற்காக அவர் தினமும் காலையிலேயே வீட்டில் இருந்து சென்று விடுவார். நேற்று காலையும் தங்கம், வீட்டில் இருந்து புறப்பட்டு பாட்டில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அழகியமண்டபம் பகுதியில் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அரசு பஸ், எதிர்பாராதவிதமாக தங்கம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து  உடல்நசுங்கி இரத்த வெள்ளத்தில்  கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அதற்குள் தங்கம் பரிதாபமாக இறந்தார்.


விபத்து குறித்து அவரது மகள் சிந்து, தக்கலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்தி ரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தங்கம் உடல் பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் சசி கைது செய்யப்பட்டார். இவர் திருவட்டார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment