மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 August 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

 


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம்  அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று(28.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு   உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.


இக்கூட்டத்தில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா, குளச்சல் உட்கோட்ட  உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவீன் கெளதம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்தாஸ் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment