வயது குறைவான மாணவர்களிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன பிறகு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி வாகனங்களை பெற்றோர்களிடம் அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 11 September 2024

வயது குறைவான மாணவர்களிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன பிறகு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி வாகனங்களை பெற்றோர்களிடம் அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்

 


வயது குறைவான மாணவர்களிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன பிறகு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி வாகனங்களை பெற்றோர்களிடம் அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்  திரு மகேஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில் 18 வயதிற்கு குறைவான பள்ளி மற்றும் கல்லூரி வரும் மாணவர்கள் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டி வந்ததால் 09  இரண்டு சக்கர வாகனங்களை போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரபு , போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில்  பறிமுதல் செய்யப்பட்டது .அதன் பின் அபராதம் விதித்து மாணவர்களுடைய பெற்றோர்களை வரவழைத்து தக்க அறிவுரைகள் வழங்கி இனிமேல் பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளிடம் இரண்டு சக்கர வாகனம் கொடுக்க மாட்டோம் என உறுதிமொழி பெறப்பட்டது

No comments:

Post a Comment