தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக கிளை நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு எம்எம் மெமோரியல் ஹால் திருவிதாங்கோட்டில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் உசேன் ஜவாஹிரி தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாநில தனிக்கைக்குழு தலைவர் சுலைமான், மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சுலைமான் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் செய்யது அகமது கரீம், பொருளாளர் முகம்மது யாசிர், துணைத் தலைவர் நபில் அஹ்மத், துணைச் செயலாளர்கள் முகம்மது ராபி, ஹஃபீஸ், ஆசிக், யஹ்யா, மற்றும் கிளை நிர்வாகிகள், மதரஸா ஆசிரியர் - ஆசிரியை, பெண்கள் தாவா குழு பொறுப்பாளர் என இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து
1. .ஓய்வு பெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி DY சந்திரசூட்டின் பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான சமீபத்திய கருத்து பெரும் அதிர்ச்சியை மக்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது, சட்டத்தின் படி ஆவணங்களின் படி வழங்க வேண்டிய தீர்ப்புக்கான தீர்வை கடவுளிடம் இருந்து பெற்றேன் என்று சொல்வது இந்திய நீதி பரிபாலனத்தை உலகம் எள்ளி நகையாடக்கூடிய சூழலை உருவாக்கி உள்ளது என இந்த கூட்டத்தின் வாயிலாக சொல்லி கொள்கிறோம்.
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா
2. வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு முயற்சிக்கிறது, வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை இம்மசோதாவின் மூலம் அரங்கேற்ற நினைக்கும் ஒன்றிய மைனாரிடிட்டி பாஜக அரசை இந்த கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டு பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இஸ்லாமியர்களின் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்ரேலின் அராஜகங்கள்
3. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இன அழிப்பில் இதுவரை சுமார் 42000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், தற்போது லெபனானிலும் மேற்கு கரை மற்றும் காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீதும் கொடூர தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கனவர்களை கொன்று குவித்து வருகின்றனர் குழந்தைகளை குறிபார்த்து சுடும் அராஜகமும் நடைபெற்று கொண்டு உள்ளது இப்படிப்பட்ட அக்கிரமங்களை அரங்கேற்றும் ஜியோனிஸ பயங்கரவாதிகளை இக் கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும் அமெரிக்க , ரஷய நாடுகளின் நன்மைகளை உறுதி செய்யும் போராக இது மாறிவிடாமல் பாலஸ்தீன மக்களுக்கான நீதி கிடைப்பதில் காந்தி பிறந்த இந்த இந்தியாபொறுப்புடன் செயல்பட வேண்டும் என இக் கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.
அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை)
4. திருமறைக்குர் ஆனில் மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று கூறப்பட்டுள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாற்றையும் , வாழக்கை செய்தியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 10 மாத கால தொடர்பிரச்சாரத்தை மிகச்சிறப்பாக இறைவனின் அருளால் செய்வோம் என இந்த கூட்டத்தின் வாயிலாக உறுதி ஏற்கிறோம்
No comments:
Post a Comment