நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேற்கு பக்கம் உள்ள நுழைவாயில் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியார் மினி பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்படுவதால் மருத்துவமனைக்கு வரும் *நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளகின்றனர்.
இது தொடர்பாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் .ரெ.மகேஷ் அவர்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் இன்று அப்பகுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தாத வகையிலும் தனியார் மினி பேருந்துகள் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் அருகில் சென்று திரும்பி வருவதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். அப்பகுதியினை தூய்மைப்படுத்தி பொதுமக்கள் நோயாளிகளும் இடையூரின்றி மருத்துவமனக்கு சென்று வருவதற்கு தேவையான நடைபாதை வசதிகளை ஏற்படுத்தவும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார்.மேலும் அப் பகுதியிலுள்ள குடிநீர் தொட்டி மற்றும் ஹெல்த் சென்டரையும் பார்வையிட்டார்.
No comments:
Post a Comment