துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் மேயர் திடிர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் .ரெ.மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டு துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் அவர்கள் பணி விவரங்கள் குறித்து மேலும் கிருஷ்ணன் கோவில் நகர் நல மையத்தில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் (DBC) வருகை பதிவேடு ஆய்வு செய்து பணியாளர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
உடன் மாநகர நல அலுவலர்.ராம்குமார், மண்டல தலைவர்கள் .செல்வகுமார், .ஜவஹர்,மாமன்ற உறுப்பினர் கலாராணி, சுகாதார அலுவலர் .பகவதி பெருமாள், பகுதி செயலாளர். சேக்மீரான் ஆகியோர் உடனிருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment